கவிதை பிடிக்குமென்று
அடம்பிடித்தாய்
கவிஞனிடம் சென்றேன்
கவிதை யாசிக்க...
பொய்களில்லாக் கவி பொன்னாகாது
பொய்கள் தேடியலைந்தேன்
உன் அழகில் மயங்கிய
மரமே மறுத்தது உனைப் பற்றி
பொய்யுரைக்க...
பின் எங்கே மந்திரியிடம் செல்வது...
யுகங்கள் பல கரைத்து
யுத்தங்கள் துச்சித்து கண்ட
ஒற்றைப் பொய்யும் பொய்யாகிப்
போகிறது தூரமாய் நின்று
மழலையுடன் கொஞ்சும்
உனை பார்க்கும் போது...
மழலையுடன் கொஞ்சும்
உனை பார்க்கும் போது...
47 Comments
புரியுது ஆனா புரியல
ReplyDeleteமுடிவில் பொய்யாகி விட்டதே...
ReplyDeleteநன்றி... (TM 1)
பொய்யும் பொய்யானதா...அடடே.
ReplyDeleteஅட சிட்டுக்குருவியும் கவிதை பாடுகின்றதே..!
ReplyDeleteஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ....:(கவிதை மிகவே அருமை.!
ReplyDeleteயுகங்கள் பல கரைத்து
யுத்தங்கள் துச்சித்து கண்ட
ஒற்றைப் பொய்யும் பொய்யாகிப்
போகிறது தூரமாய் நின்று
மழலையுடன் கொஞ்சும்
உனை பார்க்கும் போது...
அழகு!
டச்சிங்கான கவிதை
ReplyDeleteஆஆஆஆஆ இப்பவெல்லாம் சிட்டுவுக்கு
ReplyDeleteகவித.கவித யா வருதே...
பீச்சில போயிருந்தாலே கவித கொட்டுமே சிட்டு:)
//பொய்களில்லாக் கவி பொன்னாகாது
ReplyDeleteகவிஞன் சொன்னான்...//
நிஜமான பொய்கள்.. சே... உண்மைகள்... இதைத்தான் கவிஞர் வைரமுத்துவும் சொல்லியிருக்கிறார்ர்.... கவிதைக்குப் பொய்யழகு:))..
பூஸுக்கு மெய்யழகூஊஊஊ...
சிட்டுவுக்குக் கவிதையழகூஊஊஊஉ..
சீயா மீயா:).
அருமையான “பொய்“ கவிதை சிட்டுக்குருவி.
ReplyDelete(பொய்யே இல்லாக் கவிதைகளை நம் முப்பாட்டன் திருவள்ளவர் எழுதியிருக்கிறார் சிட்டு)
பொய்யில்லாக் கவிதை சொல்லப்போய் கவிதையையே கைப்பிடித்தீர்களோ.அருமை !
ReplyDeleteசிறப்பான காதல் வரிகள்! வாழ்த்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
http://thalirssb.blogspot.in
நல்ல கவிதை!
ReplyDeleteபுதிய பின்புல அட்டை நன்றாக இருக்கிறது நண்பரே!
எங்ன ராசா போய்ட???
ReplyDeleteபொய்... அருமை நண்பா...
ReplyDeleteAthisayaAugust 10, 2012 8:16 PM
ReplyDeleteஎங்ன ராசா போய்ட???////
வேற எங்க?:)Beach க்குத்தான்:).
@ ஹாரி பாட்டர்
ReplyDeleteபுரியுது ஆனா புரியல
/////////////
ஹா ஹா ஹா.....பெரிய பெரிய கவிஞனெல்லாம் எழுதுற கவிதை புரியாதாமே....
எழுதின எனக்கே புரியெல்ல அவ்வளவு சீக்கிரமா உங்களுக்கு புரிஞ்சுடுமா என்ன..........
@ தொழிற்களம் குழு
ReplyDeleteதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
உங்கள் முயற்சி தொடரவும் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெறவும் வாழ்த்துகிறேன்.
@ திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteமுடிவில் பொய்யாகி விட்டதே...
நன்றி... (TM 1)
//////////////
ஆமா பொய்யாத்தான் போச்சு சார்......
வருகைக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி
@ Sasi Kala
ReplyDeleteபொய்யும் பொய்யானதா...அடடே.
/////////
இங்க சில பேர் உண்மையையே பொய்யாக்கிறார்கள் இது ரொம்ப ஈஸி யான விடயமாச்சே....
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ
@ காட்டான்
ReplyDeleteஅட சிட்டுக்குருவியும் கவிதை பாடுகின்றதே..!
///////////
வாங்க மாம்ஸ் ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம பக்கம்...
தம்பி மாம்ஸூக்கு ஒரு டீ சொல்லு
நீண்ட நாளின் பின் உங்கள் பின்னூட்டம் கண்டு ரொம்ப மகிழ்சி
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
@ Athisaya
ReplyDeleteஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ....:(கவிதை மிகவே அருமை.!
///////////
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ கவிதையா இப்ப இப்பிடியெல்லாமா கவிதை எழுதுறாய்ங்க....
எங்ன ராசா போய்ட???
////////////
ஐயோ அதுகல ஏன் கேக்குறீங்க கொஞ்ச நேரம் ரொம்ப பிஸியாகிட்டேன்...
பின்னூட்டம் கண்டதில் மகிழ்ச்சி
@ HOTLINKSIN.COM திரட்டி
ReplyDeleteடச்சிங்கான கவிதை
////////
டச்சிங்கான கவிதை தேடிப் போயித்தான் டச்சா இருந்தவள் மிஸ்பன்னிட்டேன்....:(
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
@ athira
ReplyDeleteஆஆஆஆஆ இப்பவெல்லாம் சிட்டுவுக்கு
கவித.கவித யா வருதே...
பீச்சில போயிருந்தாலே கவித கொட்டுமே சிட்டு:)
//////////////////
கவிதை கவிதையாத்தான் வரும் கட்டுரையாவெல்லாம வராது........
பீச்சிக்குப் போனா கவித கொட்டுதோ இல்லயோ...பாக்கட்டுல இருக்கிற பணம் கொட்டுறது மட்டும் உறுதி....:0
@ athira
ReplyDeleteகவிதைக்குப் பொய்யழகு:))..
பூஸுக்கு மெய்யழகூஊஊஊ...
சிட்டுவுக்குக் கவிதையழகூஊஊஊஉ..
சீயா மீயா:).
//////////////
பூசுக்கு மெய்யழகு ... சத்தியமா மெய்ய(மேனி ) சொல்லல்லியே....
சரி நான் எழுதுற கவிதை நல்லா இருக்கெண்டு சொல்லுறாங்கதான் அதுக்காக சீயான் என்றெல்லாம் பாராட்டப்படாது....விக்கிரம் கோவிச்சுக்குவாரு (சீயான் மீயான் )
@ AROUNA SELVAME
ReplyDeleteஅருமையான “பொய்“ கவிதை சிட்டுக்குருவி.
(பொய்யே இல்லாக் கவிதைகளை நம் முப்பாட்டன் திருவள்ளவர் எழுதியிருக்கிறார் சிட்டு)
/////////////
ஐயோ அவர் கவிதைக்கு நம்ம கவிதை பக்கத்துல போயி நிற்கவும் மாட்டாதே....
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ
@ ஹேமா
ReplyDeleteபொய்யில்லாக் கவிதை சொல்லப்போய் கவிதையையே கைப்பிடித்தீர்களோ.அருமை !
////////////
கவிதை கைக்கிட்ட பிடிபட வந்துச்சு பட் முடியல்ல....
ஏன்னா எனக்குத்தான் பொய் தெரியாதே மீ ரொம்ப நல்ல பையன்
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ
@ s suresh
ReplyDeleteசிறப்பான காதல் வரிகள்! வாழ்த்த்துக்கள்!
///////////////
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்
@ வரலாற்று சுவடுகள்
ReplyDeleteநல்ல கவிதை!
புதிய பின்புல அட்டை நன்றாக இருக்கிறது நண்பரே!
/////////////
மிக்க நன்றி சார் அழகான அட்டையைத் தேர்ந்தெடுத்து கருத்துக்கு பதிலலுதும் வசதியை இழந்துவிட்டேன் போல....
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா
@ இரவின் புன்னகை
ReplyDeleteபொய்... அருமை நண்பா...
////////
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா
@ athira
ReplyDeleteAthisayaAugust 10, 2012 8:16 PM
எங்ன ராசா போய்ட???////
வேற எங்க?:)Beach க்குத்தான்:).
////////////
ஆமா பீச்சுப்பக்கம் பெரிய அண்டங் காக்காவக் கண்டு இவ்வளவு நேரமும் குழி ஒன்னுல பதுங்கிட்டு இருந்தேன்.......பதிலெழுதெல்யாம் என்னு பி பி சி ல சொன்னாங்க காக்கா தூக்கினாலும் பரவால்ல என்னு ஓடி வந்துட்டேன்...)
குழந்தையைக்கொஞ்சும் சுகமே தனியானது தாய்மைக்கு அழ்கான கவிதை சகோ!
ReplyDeleteaaahaaaa...
ReplyDeleteஆஹா கவித கவித
ReplyDeleteகவிதை நன்றாக உள்ளது. தொடர்ந்து படித்து கருத்து கூறுகிறேன், எனது தளத்துக்கும் வாருங்கள். பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள். நன்றி....
ReplyDeletehttp://varikudhirai.blogspot.com/2012/07/buddha-makes-afraid.html
ஆமாப்பா எல்லாமே பொய்யாகத்தான் இருக்கு
ReplyDelete@தனிமரம்
ReplyDeleteஅழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ
நண்பா எனக்கு உருது தெரியாது தமிழில் சொல்லு ....
ReplyDeleteஹ ஹ ஹ தூய தமிழ் புரிகிறது ஆனால் புரியவில்லை
நண்பா புதிய டெம்ப்ளேட் சூப்பர்
ReplyDelete// மழலையுடன் கொஞ்சும்// நிதர்சனம் நண்பா மிகவும் பிடித்த வரி
ReplyDeleteஅழகான வரிகள் ரசித்தேன்... மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகின்றது...
ReplyDelete@ SeeniAugust 11, 2012 6:15 AM
ReplyDeleteaaahaaaa...///////
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா
@ கிராதகன்August 11, 2012 6:26 AM
ReplyDeleteஆஹா கவித கவித
///////
வருகைக்கும் எண்ணத்தில் உதித்த கருத்தினை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ
முதல் வருகை என நினைக்கிறேன் தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்
@ Arunprasath VarikudiraiAugust 11, 2012 7:23 AM
ReplyDeleteகவிதை நன்றாக உள்ளது.
/////////
வருகைக்கும் எண்ணத்தில் தோன்றியதை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ...நிச்சயமாக உங்களின் தளத்திற்கு வருகிறேன்
@ மனசாட்சி™August 11, 2012 8:55 AM
ReplyDeleteஆமாப்பா எல்லாமே பொய்யாகத்தான் இருக்கு
//////////
என்னா பாஸ் வாழ்க்கையே வெறுத்த மாதிரி ஒரு கருத்த சொல்லிட்டு போயிருக்கிறீங்க...
கவலைப் படாதீங்க எல்லாம் நல்லாத்தான் நடக்கும்
@ asa asathAugust 11, 2012 7:12 PM
ReplyDeleteநண்பா எனக்கு உருது தெரியாது தமிழில் சொல்லு ....
ஹ ஹ ஹ தூய தமிழ் புரிகிறது ஆனால் புரியவில்லை
///////////
இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் இன்னும் புரியாது நண்பா....
நண்பா புதிய டெம்ப்ளேட் சூப்பர்
/////////
மிக்க நன்றி நண்பா
@ சீனுAugust 11, 2012 8:02 PM
ReplyDelete// மழலையுடன் கொஞ்சும்// நிதர்சனம் நண்பா மிகவும் பிடித்த வரி
////////////
அழகான எண்ணத்தை எழுத்தாக மாற்றிச் சென்றமைக்கு மிக்க நன்றி நண்பா
@ Fathima Inshaff
ReplyDeleteஅழகான வரிகள் ரசித்தேன்... மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகின்றது...
///////
ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கிறீங்க பின்னூட்டம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.....