Looking For Anything Specific?

ads header

மத நம்பிக்கையில் கை வைக்கும் சியோனிஸ்டுகள்

தொலைக்காட்சி ,இணையத்தளம் , பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் ,வானொலி என அனைத்து ஊடகங்களிலும்  பிரதான செய்தியாக டிசம்பர் உலக அழிவு தொடர்பான செய்திகளே கடந்த சில வாரங்களாக பேசப்பட்டுக் கொண்டும் பகிரப்பட்டுக் கொண்டுமிருக்கின்றன.

இந்தப் பரபரப்பான செய்திக்கான காரணங்களை எம்மில் பெரும்பாலானோர் அறிந்திருக்கின்றனர். அதில் பிரதானமாக எல்லோரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது மாயன் சமூகமும் அவர்களின் 2012 டிசம்பரில் முடிவடையும் நாட்காட்டியும் தான்.

தலைப்பிற்குள் நுழைவதற்கு சியோனிஸ்டுகள் எப்படிப்பட்டவர்கள் என்று சற்று அறிந்து கொள்வது அவசியமாக இருக்கிறது. ஆகவே முதலில் சியோசிஸ்டுகள் பற்றி சுருக்கமாக பார்ப்போம்

சியோனிஸ்ட் (Zionist) எனும் சொல் ஜெருசலம் நகரிற்கு அருகிலுள்ள சியோன் (Zion) எனும் மலையைக் குறிப்பிடுகிறது. சியோன் மலை இஸ்ரேலிய மக்களையும் ஜெருசலமையும் குறிப்பிடும் குறியீடாக யூதர்கள் மற்றும் கிரிஸ்தவர்களின் மத நூல்களில் சொல்லப்படுகிறது.
ஹிட்லர் சர்வாதிகாரி எனப் பெயரெடுத்ததற்கு பிரதான காரணம் இந்த சியோனிஸ்ட்டுகள் தான். 

அதிகளவான யூதர்களைக் கொன்று குவித்ததன் மூலமே ஹிட்லர் சர்வாதிகாரி என்று சொல்லப்பட்டார். அந்த சர்வாதிகாரி ஹிட்லர் தன்னுடைய குறிப்புக்களில் எழுதியிருந்ததாவது நான் அனைத்து யூதர்களையும் கொன்றிருப்பேன். ஆனால் நான் எதற்காக யூதர்களைக் கொன்றேன் என்று இந்த உலகு தெரிந்து கொள்வதற்காகவே ஒரு சொற்ப சிலரை மீதம் வைத்துள்ளேன்.



இது ஹிட்லர் கூற்று...

ஹிட்லரினால் மீதம் வைக்கப்பட்ட  யூதர்களுக்கு  மேற்கத்திய நாடுகள் எவையும் வாழ்வாதார உதவிகளை வழங்கவில்லை. இந் நிலையில் பலஸ்த்தீன்  மக்கள் இந்த யூதர்களுக்கு தங்களுடைய நாட்டில் வசிப்பதற்காக ஒரு சிறிய நிலப்பரப்பை வழங்குகிறார்கள்.


பலஸ்தீனத்தை நோக்கி அவர்கள் வந்ததற்கு அவர்களுடைய வேத நூல்களும் காரணமாக இருந்தன. சமாரியாவில் மீண்டும் நீங்கள் திராட்சை மரங்களை நடுவீர்கள் என்ற பைபிளின் கூற்றுப் படி சமாரியா என்பது இன்று மேற்குக் கரைப் பகுதி என அழைக்கப்படும் பலஸ்தீனப் பகுதி என்பதை அறிந்து கொண்டு அங்கு சென்று திராட்சை மரங்களை நடத் தொடங்கினர். 

சமாரியா என்பது மேற்கு கரைப் பகுதியில்லை என்பதை பின்னர் அவர்கள் அறிந்து கொண்டார்கள். ஆனால் தன் தாயகக் கனவுக்காக அதனை அவர்கள் வெளிப்படுத்தவுமில்லை. 

முதலாம் உலகப் போரின் பின்  பலஸ்த்தீன் பிரிட்டன் அரசின் வசமாகியிருந்ததால் பிரட்டனின் ஒத்துழைப்புடன் பலஸ்த்தீனத்திலிருந்த யூதர்கள் தமக்கான தாயகத்தை பலஸ்தீனத்தில் உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு அதிலும் வெற்றியைக் கண்டுகொண்டார்கள். இதற்கு அன்றைய சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்க அரசும் ஆதரவினை வழங்கியிருந்தன.

அன்றிலிருந்து பலஸ்த்தீனத்துக்கெதிராக தொடங்கியது யூதர்களின் சதி இன்று உலகிலுள்ள அனைத்து மதங்களுக்கும், மக்களுக்கும் எதிராக தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.


உலகத்தில் நடக்கும் எந்தவொரு செயற்பாடானாலும் அதில் இந்த சியோனிஸ்ட்டுகளின் பங்களிப்பு பிரதானமாக இருக்கின்றது. இவர்களுடன் இசைந்து போகாத யாராக இருந்தாலும் அது வல்லரசு நாடானாலும் சரியே அவற்றிற்கு எதிராக போர் தொடுப்பதும் மக்களை அநியாயமாக கொலை செய்வதையுமே வழக்கமாக கொண்டுள்ளார்கள்.


உலகில் இப்போதிருக்கும் வல்லரசு நாடுகளும் இவர்களின் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆதரவு தெரிவித்துக் கொண்டேயிருக்கின்றனர். என்ன காரணம் என்பதை இறைவனே அறிந்தவன்.


இந்த சியோனிஸ்டுகளின் இன்னுமொரு கூத்தைப் பாருங்கள்


நீங்கள் யூதர்களை தனி இனம் என்று நம்புகிறவரா ? யூதர்களின் தாயக் உரிமையினை ஏற்றுக் கொள்கிறவரா ? அப்படியானால் , இஸ்ரேலில் வசிக்கா விட்டாலும் , யூதராக இல்லாவிட்டாலும் நீங்கள் ஒரு சியோணிஸ்ட் .

இதுதான் அவர்கள் சியோனிசத்துக்குக் கூறும் வரைவிலக்கணம். எவ்வளவு இலகுவாக சியோனிஸ்ட்டுகளை அடையாளம் காணக்கூடிய வரைவிலக்கணமாக அமைந்திருக்கிறது.


உதவி 
http://www.zionism-israel.com/zionism_definitions.htm

இஸ்ரேலினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சியோனிஸ்ட்டுகள் உலகம் பூராகவும் காணப்படுகிறார்கள். உலகத்தில் இருக்கும் மதங்களில் இவர்களுடைய யூத மதம் மாத்திரம்தான் சிறந்தது என்ற கொள்கையைக் கொண்டுள்ளதுடன் இவர்களின் மதத்தினை ஏனையவர்களிடம் எத்திவைக்கும் பணியினையும் இவர்கள் செய்து கொண்டுமிருக்கின்றார்கள்.

பிரதான செய்தி ஊடகங்களான CNN போன்றவை இந்த சியோனிச வாதிகளின் கைப்பொம்மைகளாகவே செயற்படுகின்றன. இவைகளிலிருந்து வெளியாகும் செய்திகளில் அதிகமானவை இவர்களுக்கு சார்பானதாகவே இருக்கின்றன.



2001 செம்ரெம்பரில் நடைபெற்ற அமெரிக்காவின் உலக வர்த்தக மையத் தகர்ப்புக்கும் இஸ்ரேல் மற்றும் சியோனிச வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக பெரும்பாலான ஆய்வாளர்கள் மற்றும் இணையத்தளங்களும் கூறியிருக்கின்றன.



செம்ரெம்பர் 11 தாக்குதலை காரணமாக வைத்து அரேபிய நாடுகளின் கணிய வளங்களை கொள்ளையடிப்பதே இதன் பிரதான நோக்கம் என்று சில நடுநிலைவாதிகள் கருத்துத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடப்பட வேண்டியது.

உதவி
http://mycatbirdseat.com/2011/09/the-911-delusion-israel%E2%80%99s-false-flag-jingoism-and-inhumanity/ 

ஒவ்வொரு முறையும் இடம்பெறும் ஒலிம்பிக் நிகழ்வுகளிலும் இவர்களின் தலையீடு இல்லாமலில்லை. இந்த வருடம் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு தயாரிக்கப் பட்ட லோகோக்கள் இவர்களின் தலையீட்டை வெளிப்படையாகக் காட்டுகிறது.


உதவி
http://www.deliberation.info/uk-and-israel-an-alliance-of-enemies/  


இப்படி உலகின் முக்கியமான பல நிகழ்வுகளில் சியோனிஸ்டுகளின் தலையீடு தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. இதன் மூலம் இவர்கள் இந்த உலகம் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது என்பதனை சொல்லிக் கொள்கிறார்கள். 

உலகத்தைத் தங்களுடைய கட்டுப்பட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனும் முயற்சியின் ஒரு கட்டம் தான் பொருளாதாரத்தில் கொண்டுவரப்பட்ட உலக மயமாக்கல். ஆரம்பத்தில் பிரிட்டன் யுத்தம் செய்து நாடுகளை எவ்வாறு தன் வசமாக்கிக் கொண்டதோ, அதே நிலையினை மீண்டும் கொண்டுவருவதுதான் உலகமயமாக்கலின் நோக்கமாக இருக்கிறது.
 
இவர்களின் இந்த உலகமயமாக்கல் கனவுக்கு ஒரு சில நாடுகளே ஆதரவினை வழங்கியிருந்தாலும் ரஷ்யா போன்ற பெரும்பாலான நாடுகள் ஆதரவினைத் தெரிவிக்க வில்லை.

பதிவின் தலைப்பை விட்டு வேறொரு பகுதிக்குச் செல்கிறேன் என்றாலும் இதுவும் இந்தப் பதிவுக்குத் தேவைதான்.

சரி மத நம்பிக்கையில் சியோனிஸ்டுகள் எவ்வாறு கை வைக்கிறார்கள், டிசம்பரில் உலகம் அழியுமா, டிசம்பர் உலக அழிவு தொடர்பான கூற்றுக்கள் உண்மையானதா என்பது பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். இந்தப் பதிவே நீளமாகப் போய்விட்டது இன்னும் நீட்டினால் அடுத்த தடவை வரும்போது துப்பாக்கியுடன் வருவீர்களோ என்று பயமாக இருக்கிறது.


Post a Comment

31 Comments

  1. அருமையான அலசல் நண்பரே! அந்த மதத்தில் இந்த வருடத்தோடு முடிகிறது. எனபது உண்மையானால் இந்த வருடத்தோடு உலகம் அழிந்துவிடுமா? அல்லது அதற்கு மாறாக, மீண்டும்தொடர்ந்தால் அந்த மதத்தவர்கள் தங்களது நம்பிக்கையை கைவிட்டு விடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!.

    ReplyDelete
    Replies
    1. //அந்த மதத்தில் இந்த வருடத்தோடு முடிகிறது.//

      இது எப்பத்துல இருந்து

      Delete
    2. முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
    3. ஹாரி.RDecember 3, 2012 4:47 PM

      //அந்த மதத்தில் இந்த வருடத்தோடு முடிகிறது.//

      இது எப்பத்துல இருந்து
      //////////////////////

      :) நன்றி பாஸ்

      Delete
  2. நல்ல பகிர்வு.காத்திருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  3. செம்மலை அவர்களே. டிசம்பரில் உலகம் அழியும் என்று யூத மதம் சொல்ல வில்லை மாயன் நாட்காட்டி 2012 டிசம்பர் வரை எழுத பட்டிருக்கு அதனால் உலகம் அழியுமுன்னு சிலர் கற்பனை செய்து கொண்டார்கள். மாயன் நாகரீகத்திற்கும் யூத மதத்திற்கும் சம்மந்தம் இல்லை.
    ஆனால் கண்டிப்பாக இந்த வருடம் டிசம்பரில் உலகம் அழியாது. உலகம் எப்போது அழியும் என்பது யாருக்கும் தெரியாது

    ReplyDelete
    Replies
    1. சிலர் கற்பனை செய்து கொண்டார்கள்.
      //////////////

      சிலர் கற்பனை செய்து கொண்டார்கள் என்பதை விட சிலரின் கற்பனையில் உலக அழிவை உருவாக்கிவிட்டார்கள் சிலர் என்றுதான் சொல்ல வேண்டும்..

      முதல் வருகை கண்டட்தில் சந்தோஷம்
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  4. என்ன சொல்றீங்க... காத்துருக்கேன் அடுத்த பதிவுக்கு

    ReplyDelete
    Replies
    1. காத்திருங்கள் பாஸ் அடுத்த பதிவுல சொல்லுறேன் மொக்கையா இருக்கு என்று சொல்லிட்டு பிரம்பை தூக்கிடாதீங்கோ

      Delete
  5. உங்கள் பதிவு தொடர காத்திருக்கிறோம் நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நாளை என்ன நடக்கும் என்ற ஒன்று இறைவனுக்கு மட்ட்மே தெரியும்
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  6. But Jews never expressed their views like islamists. Only islam says that they will rule the whole world one day

    ReplyDelete
    Replies
    1. அப்பிடியேதான் ........
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றிங்க

      Delete
    2. yes, one day jesus will come back to world, he will convert all into muslims

      Delete
  7. இந்த வருடத்தோட முடிகிறதா ?

    அப்படியா அடடா சீக்கிரமா அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. :)
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றிங்க

      Delete
  8. nalla muyarchi thoadarungal.....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  9. யூத மதத்தின் கோட்பாட்டினை உங்களின் பகிர்வு மூலம் அறிந்துகொண்டேன்.சியோனிஸ்ட்டின் சதிகள் அதிகமாகத்தான் இருக்கின்றது வியாபார ஊடகத்தில்! நீண்ட அலசல் பதிவு ஆத்மா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நேசன் அண்னா

      Delete
  10. ஆத்மா.... உலகம் அழியறதுக்கு முன்னாடி அடுத்த பதிவைப் போட்டுடுங்க...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.....
      முயற்சி செய்கிறேன்
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  11. ஆத்மாவா மாறிட்டீங்கள்.சொல்றதை நம்பித்தான் ஆகவேணும் !

    ReplyDelete
    Replies
    1. ஹையோ....
      எல்லாத்தையுமே நம்பிடாதீங்க...
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றிங்க

      Delete
  12. அடடா.. என்ன சொல்லுறீங்க ஜிட்டு?.. ஒண்ணுமே பிரியுதில்ல எனக்கு.. ஆத்மா ஆகியதும்.. எழுத்தின் பாணியே மாறிப்போச்ச்ச்ச்:)) நம்மட ஜிட்டுவா இது?:)

    ReplyDelete
  13. //சும்மா இதையும் படிச்சிட்டு போகலாமில்ல...//

    சும்மா எல்லாம் படிக்க மாட்டோம்ம்.. நீங்க.. ஒரு மட்டின் பிர்ர்ர்ர்ர்ஆஆஆஆணிப் பார்ஷல்.. அல்லது நெய்ய்ய்ய்ய்ய்ய்ச் சோறு வாங்கித் தாங்க படிக்கிறோம்:))

    ReplyDelete
  14. வணக்கம் நண்பரே,

    //உலகத்தில் எந்த மூலையிலும் எந்தவொரு நிகழ்விலும் சியோனிஸ்டுகளின் பங்களிப்பு இல்லாமலில்லை. அவர்களின் பங்கினை எந்தவொரு அடையாளத்திலாவது விட்டுச் செல்லாமலுமில்லை. இவர்கள் தங்கள் மதத்தில் தீவிர போக்குடையவர்களாகவும் காணப்படுகிறார்கள் என்பதற்கு சில ஆதாரங்களை இந்தப் பதிவிலும் தருகிறேன்.//

    இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு. யூதர்களின் மொத்த மக்கள் தொகை வெறும் 2 கோடிக்கும் குறைவு.உலக மக்கள் தொகையில் வெறும் 0.2% மட்டுமே.

    //இந்த 666 குறிப்பிடுவது என்ன என்று பார்க்கும் போது இது பைபிளில் சொல்லப்படும் ஒரு வசனத்தினை மையமாகக் கொண்டுள்ளமை தெரியவருகிறது. இதுதான் அந்த வசனம்...//

    அப்படியா மனுதர்மத்தில் எழுதி இருப்பதை உண்மை என ஏற்றால் இதையும் ஏற்கலாம். யாரோ எதற்கோ எழுதி வைத்ததை ந்ம்பிக்கையோடு மத புத்கத்தில் சேர்த்து சாமி கும்பிடுவதில் ஆட்சேனை இல்லை. அதில் சொல்லி இருப்பது அனைத்தும் உண்மை என்பது சரியல்ல.பைபிளின் படி உலகம் தோன்றி 7000 வருடம்தான் ஆகிறது.இது சரி எனில் 666 ஆம் சரி!!
    **
    //ஆனால் இன்றைய அறிவியல் உலகம் குறித்த ஒரு தினத்தினை (21.12.2012) பிரதானமாகக் காட்டி அன்றுடன் உலகம் அழியும் என்று திடமாகச் சொல்கின்றது.//
    புல்லரிக்க வைக்கிறீர்கள் அய்யா!!.எந்த அறிவியல் மேதை, கழகம் கூறியது?சுட்டி தரவும்.
    ***
    இப்ப நான் ஒரு சுட்டி தருகிறேன். அதிலும் இந்த 666 பற்றி இஸ்லாம் என சதிக் கோட்பாடு சொல்கிறார்கள். இதைப் பற்றி எழுதுவீர்களா!!!
    http://waitingforjesus.com/whois666.html
    http://www.youtube.com/watch?v=iku8YzLFPpE
    எதை வேண்டுமானாலும் எழுதிக் குழப்பலாம் என்பதைக் காட்டவே கூறுகிறேன்.

    ஹிட்லர் யூதர்களை ஏன் கொன்றார் என்றால், இராஜபக்சே ஏன் தமிழர்களைக் கொன்றான், குஜராத்தில் முஸ்லிம்கள் ஏன் கொல்லப்பட்டார் என்வும் கேட்கலாம்.

    இனப்படுகொலைகளை நியாயப்படுத்துவது மனித நேயம் அல்ல!!!
    பொது தளத்தில் வெளியிடும் போது ஒரு இனத்தை விமர்சிக்கும் கருத்துகளை தவிர்ப்பது நலம்.
    பாலஸ்தீன இஸ்ரேல் குறித்து கொஞ்சமாவது படியுங்கள். வரலாறு,அறிவியல் சார்ந்து எழுதும் போது மூலச்சுட்டிகள் கொடுப்பதே சரி!!
    பின்னூட்டம் வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்.
    அவசியம் எனில் மறுப்பு பதிவு வெளியிடுவேன்.

    நன்றி

    ReplyDelete
  15. 2012 க்கு மேல் அவர்களுக்கு கணக்குப் போடத்தெரியவில்லையோ என்னவோ!!
    எனவே கற்பனைக்கு இடம் கொடேல்!!!!!!!!!!!

    ReplyDelete
  16. நல்ல முறையிலான ஆய்வு

    ReplyDelete