Looking For Anything Specific?

ads header

வெளிநாடுகளில் வியர்வை சிந்தும் நட்புகளுக்காக…


சில நிமிடங்கள் தாமதியுங்கள் – சிந்தியுங்கள்
தனக்காகவும் தங்களது குடும்பங்களுக்காகவும் அயராது வெளிநாடுகளில் பாடுபடும் நண்பர்களே நீங்கள் அங்கு ஹலாலான முறையிலேயே பொருளீட்டுகின்றீர்கள் என்று நல்லெண்ணம் வைக்கின்றேன். நீங்கள் உங்களுடைய இரத்தத்தை வியர்வையாக்கி, மிகவும் சிரமத்துக்கு மத்தியில் பல இன்னல்களைச்சகித்து பல வருடகாலமாக பொருளீட்டுகின்றீர்கள், நல்லது உங்களுடைய அப்படியான ஹலாலான பொருளீட்டலில் அல்லஹூத்தாலா பறகத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த வேண்டும்.
நீங்கள் அப்படி சிரமப்பட்டு பொருளீட்டி சிறிதளவு பணத்தை சேமித்து இனிமேல் வெளிநாடு வந்து உழைக்கக் கூடாது இப்படியான சிரமங்கள் படக்கூடாது இனிமேல் சொந்த நாட்டில் ஏதாவது ஒரு தொழிலில் முயற்சி செய்வோம் எனும் நோக்கத்துடன் நீங்கள் சேமித்த பணதுடன் தாயகம் திரும்புகின்றீர்கள். தாயகம் திரும்பிய நீங்கள், வெளிநாடுகளில் சிரமப்பட்டு ஹலாலாக உழைத்த பணத்தை இங்கிருக்கும் புரோக்கர்களுக்கு இலஞ்சமாகக் கொடுத்து ஏதாவது ஒரு அரச தொழில் பெற எத்தனிக்கின்றீர்கள், தொழில் பெற்றும் இருக்கின்றீர்கள் இவ்விடத்தில் தான் நீங்கள் சிந்திக்க வேண்டும்.
நீங்கள் இவ்வளவு நாளும் சிரமப்பட்டு ஹலாலாக உழைத்து உங்கள் இரத்தத்தை ஹலாலாக்கிவிட்டு இலஞ்சமெனும் ஹராமிற்குள் தங்களை நுழைத்து இவ்வளவு நாளும் பட்ட கஷ்டத்திற்கும் அல்லாஹ்விடத்தில் பலனில்லாமல் செய்கின்றீர்களே ! சிந்திக்க வேண்டாமா !
நீங்கள் இலஞ்சம் கொடுத்து பெற்றுக்கொண்ட தொழில் மூலம் பெறும் ஒவ்வொரு நன்மையும் இந்த துன்யாவில் மட்டும்தான் அதைக் கொண்டு ஆஹிராவில் எந்த பலனும் கிடைக்காது என்பதை அறிஞர்கள் உலமாக்களை அனுகி தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.
இலஞ்சமாகக் கொடுத்து பெற்றுக்கொண்ட தொழிலில் இருக்கும் போதே மௌத்தாகிப் போனால் உங்களின் நிலை என்னவென்று சிறிதும் சிந்திக்கவில்லையா
இப்படியான தொழில் மூலம் பெற்றுக்கொண்ட சம்பளத்தை உங்கள் குடும்பத்துக்காக செலவு செய்து நீங்கள் மட்டுமல்லாமல் உங்களது மனைவி பிள்ளைகளினது இரத்தத்தையும் ஹராமாக்குகின்றீர்களே !
அரச தொழில்தான் வேண்டுமென்றால் போட்டிப்பரீட்சைகள், நேர்முகப்பரீட்சைகளுக்குத் தோற்றி அரச விதிமுறைகளுக்கு உடன்பட்டு தொழிலொன்றைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள் அரச தொழில் பெற்ற எத்தனையோ பட்டதாரிகள் அரச தொழிலை உதறிவிட்டு வெளிநாடுகளிலும் சொந்த நாட்டில் சுய தொழில்களிலும் ஈடுபட்டிருகின்றார்கள்.
ஆகவே சிந்தியுங்கள் ஹலாலான பொருளாதாரத்தை ஈட்டுங்கள் எங்கள் இரத்தம் சுத்தமாக இருந்தால் இன்ஷா அல்லாஹ் எங்களுடைய துஆக்களுக்கு உடன் பதில் கிடைக்கும்.

Post a Comment

0 Comments