நண்பன் கவிஞர் அகமது ஃபைசல் இன் #வலது_கால்_புன்னகை கவிதை நூல் இன்ஷா அல்லாஹ் நாளை பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெறவிருக்கின்றது
நண்பருக்கு வாழ்த்துக்கள்
எல்லோரும் கட்டாயம் வருகைதருமாறு நண்பன் சார்பாக அழைக்கின்றேன்
சில நிமிடங்கள் தாமதியுங்கள் – சிந்தியுங்கள் தனக்காகவும் தங்களது குடும்பங்களுக்காகவும் அயராது வெளிநாடுகளில் பாடுபடும் நண்பர்களே நீங்கள் அங்கு ஹலாலான முறையிலேயே பொருளீட்டுகின்றீர்கள் என்று நல்லெண்ணம் வைக்கின்றேன். நீங்கள் உங்களுடைய இரத்தத்தை வியர்வையாக்கி, மிகவும் சிரமத்துக்கு மத்தியில் பல இன்னல்களைச்சகித்து பல வருடகாலமாக பொருளீட்டுகின்றீர்கள், நல்லது உங்களுடைய அப்படியான ஹலாலான பொருளீட்டலில் அல்லஹூத்தாலா பறகத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த வேண்டும். நீங்கள் அப்படி சிரமப்ப…
மேலும் படிக்கநான்
நம் பக்கத்து வீட்டாரிடமும்
இரண்டு வீட்டிற்கப்பாலுள்ள
மாமாவிடமும்
தெரு சந்தியில் இருக்கும் நம்
கடைசி தங்கச்சியிடமும்
அடுத்த தெருவில் இருந்த
மதினியிடமும்
உங்க பாஸ்போர்ட் தேடி உங்க
மாமியார் வீடு செல்ல,
பாஸ்போர்ட் எதற்கு
மாமி வினவ
மாமியிடமும் தகவல் சொன்ன போதும்
ஏன் தொலைபேசியில்
தகவல் கேட்ட இளைய மச்சானும்
சகோதரியும்…
கொழும்பிலிருந்து வந்துகொண்டிருக்கும்
உங்களைப் பற்றி நீங்கள் ஆசையாய்
தங்கும் மர்கசில் மசூரா செய்யும் போது
கூடியிருந்தவர்கள்…
இவர்களெல்லாம் விம்மியும்
கதறியும் கண்ணீர் வ…
வீதியில் விழத் தவறிய மழைத்துளி
என்னோடு பயணிக்கின்றது
பேரூந்தில்,
சுற்றிலும் குளிர்
எனக்கும் மழைத்துளிக்குமான
நெருக்கம் குளிரை
இதமாக்கியது
உறவுகொண்டுவிட்டேன்
மழைத்துளியுடன்.
இப்போது எங்களுக்கு குழந்தைகள்
இரண்டு,
மண்வெட்டியுடையோர்
மழை தேடி
என் குழந்தைகளை அழைக்கின்றனர்
வெளியே வந்த நான்
குழந்தைகள் வேட்டைக்கு என்கிறேன்
காட்டில் உரத்த மழை...
சமூகத்தின் மூத்த பிரஜை எனும் அந்தஸ்த்தைக் கொடுத்து எனது தந்தையை கௌரவித்திருக்கின்றார்கள் அரச சமூக சேவைகள் திணைக்களத்தினர்
எனது தந்தையுடன் சேர்ந்து இந்த கௌரவம் இன்னும் சிலருக்கும் வழங்கப்பட்டது
அனைவரையும் வாழ்த்துகின்றேன்
நேற்றிரவு உறங்க
நினைத்து
மரணித்துவிட்டேன்
நான் மரணித்ததையறியாத
உறவுகள் வழமைபோல்
காலைத் தேனீருக்காய் எனை
எழுப்புகின்றனர்
மரணித்ததை நிரூபிக்கும்
நிர்ப்பந்தத்தில் நான் ...
யாரோ சிலர் நல்லவர்களுக்கு
மரணமில்லையென்று
பேசிக்கொள்வது
என் காதுகளில் ஒலிக்கிறது...
எல்லாமுமே கணனி மயப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நவீன உலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாகிக்கொண்டேயிருக்கின்றது. வளர்ந்துகொண்டேயிருக்கும் தொழில்நுட்பத்திற்கு தகுந்தாற் போல் நம்மை நாமும் வளர்த்துக்கொள்வதென்பது தவிர்க்க முடியதவொன்றாக இருக்கின்றது. இப்படி தொழில்நுட்பத்திற்கு இணைந்ததாக நம்மை நாம் மாற்றிக்கொள்ளுதல் சாத்தியமாவது அதிக வருமானமீட்டும் வர்க்கத்தினரிடம் மட்டுமேயாகும். பண முதலைகளாகக் காணப்படும் இவர்கள் உலகில் அறிமுகப்படுத்தப்படும் பெரும்பாலான தொழில்நுட்ப வளர்…
மேலும் படிக்கபொதுவாக நாவல்களில் அதிகளவு நாட்டமில்லை, தமிழகம் ஓரளவுக்குப் பழக்கப்பட்டிருந்தாலும் எனது தேசத்து நாவல்களில் பதுமராகம் புதிதாக சுவைக்கும் நாவல், நாவல் கையில் கிடைத்த தினம் அட்டைப்படம், அதற்கடுத்ததாய் உள்ள நாவல் பற்றிய தகவல்கள் அடங்கிய இரண்டு பக்கங்களையுமே சுவைக்க முடிந்தது, அட்டைப்படத்தைப் பார்த்தவுடனேயே உள்ளே இருக்கும் சரக்கு எப்படியாய் இருக்கும் என்பதைப் புரிந்துக்கொள்ள முடிந்தது. பின்னர் இரண்டு நாட்களின் பிற்பாடு நாவலை சுவைக்க ஆரம்பித்தேன், பெரிதாக நாட்கள் தேவைப்படவில்லை, …
மேலும் படிக்கஉங்கள் அதிகாரம் சதிகாரர்களால்
சமாதியாகிட்டதே என்றெண்ணி
அகங்காரம் கொண்டாடும் அடிமட்ட
அதிகாரிகளுக்கு
காலம் பதில் சொல்லும் காக்கா,
அரங்கினையும், சுற்றியுள்ளைவையையும்
அழங்கரித்த உங்கள்
பெனர்கள், இன்றும் அழுதுகொண்டிருக்கின்றன,
ராஜகுமாரன் தரிசனம் பார்த்து....
பிரதான தெரு முழுக்க கட்சியினைப்
பிரதிபலிக்கும் கொடிகளுக்கு
நீங்கள் கொடுத்த கதாநாயக பாத்திரத்தை இன்று
கருங்கொடியில் யாரால் கொடுக்க முடியும் ?
அக்கரையில் சக்கரையாய்
சேர் ஊருக்கு வாரார் என்று சொல்லி
அடிக்கடி
உங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு…
இது எனதெழுத்து
புரிந்துகொள்ள பலருக்கு
வருடங்கள் பலவாகலாம்
சிலருக்கு தாசாப்தங்களுமாகலாம்
இன்னும் சிலரோ முன்ஜென்மத்தில்
பழக்கப்பட்டிருப்பர்
எழுத்துக்கும் எனதான்மாவுக்கும்
தொப்புள் தொடர்பிருக்கின்றது
தடித்த எழுத்துக்களில்
சொல்லின், ஆன்மாவை உயிர்ப்பிக்க
எழுத்துக்களை நான் சுவைக்க வேண்டும்
எழுத்துகளை மட்டுமே...
சமயங்களில் எழுத்துகள்
எட்டாக்கனியாகின்றன எவ்வளவும்
முயற்சித்தும், ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்
இதோ இப்போது நான்
எழுதுவதைப் போன்று.... அப் பொழுதுகளில்
எனதான்மாவே என்னை பழிக்கும்,
கேவலமாய், நக்கலாய் எனை வ…
விழியுனுள் விழியாக உனைவைத்து
உன் விழிநீர் சிந்தாமல் பார்த்திட
காத்திருக்கிறேன் இன்னுமொரு
முடிவில்லா வாழ்க்கையை எதிர்பார்த்து
முடிவில்லா வாழ்க்கைதேடி
மூலதனமாய் என் வாழ்வையிட்டு
முழு வாழ்வையும் இழந்துவிட்டேன்
கிடைக்கவில்லை முடிவில்லா வாழ்க்கை
இனிமேலும் இழப்பதற்கு
எதுவுமற்றவனாய் திரும்புகிறேன்
கதவோரத்தில் காத்திருக்கிறாய்
உன் வாழ்வுதந்து எனை மீட்க
எனக்காக உயிரையே தருவதாக
கூறிச் செல்கிறாய்
உன்னுயிர் என்னிடமிருக்க
புரிந்துகொண்டேன்
நீ புலம்புவது பொய்யென
நானேதும் உனக்காக செய்ததில்ல…
ஒழிந்திருக்கும் என் அச்சங்களில் கலந்திருக்கிறது பெறுமதி மறந்த உனைப்பற்றிய நல விசாரணைகள், ஒரு நாள் உச்சபட்ச என் தைரியத்தை ஆயுதமாய் பாவிக்க நினைத்து, என் மீதான உன் புரிதல், அக்கறை, நேசிப்பைப் பற்றி உரையாடுகின்றேன், நீயோ அலட்சியப்படுத்தியவளாய் நடைபோடுகின்றாய், இன்னும் சொல்லப் போனால் நான் உன்னிடம் பேசும் போது உன் முகத்தைக் கூட தெளிவாகப் பார்க்கவில்லை, ஏதோ பின் இரவுக் கனவுகளில் தோன்றும் உருவமாய் அன்று நீ தோன்றியாய்
திடீரென ஏதோ என் மனதில் தோன்ற முன்னைய தினம் உன்னுடன் பேசியதை மீட…
எனக்கென
ஏற்பாடு செய்யப்பட்ட நாட்களில்
சில மணி நேரங்களை
யாரோ சிலர் களவாடிவிட்டனர்
யாரை சந்தேகிப்பது ?
திருப்திப்பட்டுக் கொள்கிறேன்
களவாடியதாய் சந்தேகித்த
என் மணி நேரங்களுடன்
என் வீட்டிலுள்ளவர்கள் பேசிக் கொண்டும்
விளையாடிக்கொண்டுமிருக்கின்றனர்
தூரமாய் நின்று வேடிக்கை பார்க்கிறேன்
நிமிடங்களில் சில
என்னைப் பார்த்து புன்னகைக்கின்றன...
Social Plugin