Looking For Anything Specific?

ads header

சாதனைகள் சவாலானவை அல்ல

என் தேசத்து, என் கிராமத்து மக்கள் இப்போது சாதனையாளர்களை கௌரவப்படுத்த பழகிக் கொண்டார்கள். முன்னெரெல்லாம் சாதனைகள் நிகழ்த்திவரும் எம்மவர்களை அவர்களின் இறுதிச் சடங்குகளில்தான் இவர்கள் இன்ன இன்ன  சாதனைகள் புரிந்திருக்கிறார்கள்  என்று தெரிந்துகொள்ளலாம். ஆனால் நிலமை இன்று தலைகீழாய் மாறிவிட்டது என்றே உணர்கிறேன். எம் தேசத்தவன் சந்திரமண்டலத்தில் சென்று சாதனை புரிந்தாலும் (புரிந்தாலும் அல்ல புரிவான்)  அவன் பூமிக்கு வந்து சேர்வதற்கு முன்னர் இன மத மொழி கலாச்சார வேறுபாடின்றி அவனைக் கௌரவப்படுத்த இன்று ஒரு கூட்டம் எம் தேசத்தில் உருவாகியிருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியளிக்கிறது.

நேற்று நான் கலந்துகொண்ட பாராட்டு நிகழ்வொன்றில் தான் எனக்கு இப்படியான ஒரு கூட்டம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை  உணர முடிந்தது. ஒரு சாதனையாளனை அவனது சொந்த கிராமத்தவர்கள் பாராட்டுகிறார்கள் என்பது சாதாரண விடயம். ஆனால் அதே சாதனையாளனை அவனது கிராமத்துக்கு அருகிலிருக்கின்ற கிராமங்களில் உள்ளவர்களும் பாராட்டுவதற்கு தயாராகவிருக்கின்றார்கள் என்றால் அதை நம்பமுடியாமலிருக்கிறது. ஆனால் அதுதான் உண்மை. மக்களின் மனங்கள் இப்போது சாதனைகளையும் சாதனையாளர்களையும் தேடியலைகின்றது , மக்கள் எம் தேசத்தின் குறைகளை இனங்கண்டுவிட்டார்கள்.  இலைமறை காய்களாக இருக்கும் சாதனையாளர்களுக்கு இனி பொருத்தமான களம் அமைய போகின்றது. இனிமேல் சாதனைகள் சாதாரணமாய் நிகழப்போகின்றது.

இந்தியாவின் கோவா மாநிலத்தில் சென்ற மாதம் 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கிடயிலான  லுசிபோனியா விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்டு 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்து இலங்கையின் பதக்கப் பட்டியலில் மேலுமொரு தங்கப்பதக்கத்திற்கு இடமமைத்துக் கொடுத்தும் தன் தாய் நாட்டிற்கும் தான் பிறந்து வளர்ந்த தாய் மண்ணிற்கும் பெருமை சேர்த்திருக்கும் என் கிராமத்து சாதனையாளன் ஏ. எல் . எம் அஸ்ரப் இனை வாழ்த்தும் / பாராட்டும் நிகழ்வில் தான் நான் கலந்துகொண்டது.
நிகழ்வின் கதாநாயகன் நண்பன் அஷ்ரப்
காலை 9 மணிக்கு ஆரம்பித்து கிராமத்தின் முக்கியமான தெருக்களுடான பயணித்த பாராட்டு ஊர்வலம் பிற்பகல் 2 மணிவரை சுமார் 10 கிலோமீற்றர் தூரத்தை முடித்திருந்தது. சாதனை நாயகனுக்கு கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலுமிருந்து வாழ்த்துக்களும் பூ மாலைகளும் குவிந்தன.ஒவ்வொரு தாயும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். வயதான பாட்டிகளின் முத்தத்தால் சாதனை நாயகனின் முகம் நனைந்து போனது,பூக்களும் மாலைகளும் கொண்டு நாயகனது உடல் நிறைந்துவிட்டது, ஒவ்வொரு கர்ப்பிணித் தாய்களும் தான் வாழ்த்துச் சொல்லும் போது தன்னுடைய  வயிற்றிலிருக்கும் குழந்தைகளும் உன்னைப்போல் சாதனை புரியவேண்டும் என்று சொல்லிக் கொண்டனர்.

நீண்ட காலத்தின் பின்னர் குலவைச் சத்தங்களை எழுப்பி குடும்பப் பெண்களும் சத்த வெடிகள் வெடித்து கிராமத்து இளைஞர்களும் பாராட்டு ஊர்வலத்தை மேலும் மெருகேற்றியது சுமார் 15 வருடங்களுக்கு முன்னைய காலத்துக்கு என்னைக் கூட்டிச் சென்றுவிட்டது.(நல்லவேளை நண்பன் கையப் பிடிச்சி இழுத்து சுய நினைவுக்குக் கொண்டுவந்துட்டான் இல்லேன்னா நான் இப்ப 10 வயசு சிறுவனாத்தான் இருந்திருப்பேன்) தலைக்கவமசணிந்து மோட்டார் சைக்கிளில் போகும்போதும் போக்குவரத்துப் போலீஸைக் கண்டால் பயந்துகொள்ளும் சாரதி அனுமதிப்பத்திரமில்லாத இளைஞர்கள் போக்குவரத்துப் போலீசுக்கு முன்னால் தலைக்கவசமணியாமல் தைரியமாக மோட்டார்சைக்கிளோட்டிச் சென்றதை பெருமையாகப் பேசிக் கொள்கிறார்கள், காற்றுவீசும் போது தூற்றிக் கொள் என்று இதைத்தான் சொல்வார்களோ (மக்கா நாளைக்கு மாட்டினீங்க சங்குதான் போலீஸ் மைண்ட் வாய்ஸ்). அரசியல் பிரமுகர்களும் போலீஸ் அத்தியட்சகர்களும் மூவின மதத் தலைவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு சாதனை நாயகன் அஸ்ரபிற்கு வாழ்த்துத் தெரிவித்தது கிராமத்தின் மூவின மக்களின் ஒற்றுமையையும் காட்டுகிறது என்று அரசியல்வாதிகள் போல் பேசுகிறது என் மனசு.

என் கிராமத்தான் என் மச்சான், என் நண்பன், என் மாமன், என் மன்னன் ,என் தளபதி அஸ்ரபுக்கு நானும் என் வாழ்த்தை என் வலைத்தளமூடாக தெரிவிக்கிறேன்  நீங்களும் அவருக்கு ஒரு வாழ்த்தைக் கூறிச் செல்லுங்கள். அஸ்ரப் நீ இன்னும் பல சாதனைகள் செய்ய வேண்டும் நீ ஒலிம்பிக் போட்டிகளிலும் கலந்துகொண்டு அதிலும் வெற்றியீட்டி எம் தேசத்துக்கும் எம் கிராமத்துக்கும் பெருமை சேர்க்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பிரதேச சபைத் தலைவர் மற்றும் கிராமத்தின் முக்கிய பிரமுகர்களுடன்

பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொன்னாடை அணிவித்தபோது

முன்னாள் ரக்பி தக்கப்பதக்க வின்னரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மஜீட் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்த போது

இந்தவிடத்தில் இன்னுமொருத்தருக்கு நான் வாழ்த்துச் சொல்லியே ஆகவேண்டும் இவருக்கு ரிஸ்க் எடுப்பது சும்மா ரஸ்க்கு சாப்பிடுறமாதிரி,  களத்துல இறங்கினா இவரு தோனி, இவருக்கு இருக்கிற ஒரே ஆசை சொந்தமாக ஒரு வீடு வாங்கி அதில இவருடைய அம்மாவை வைத்து அழகு பார்க்க வேண்டுமென்று, நேற்று இவருடைய அந்தக் கனவும் நிறைவேறிவிட்டது, ஆமாங்க சூப்பர் சிங்கரின் தோனி திவாகர் நேற்று டைட்டில் வின்னராகிட்டார் என்கிறது எல்லோருக்கும் தெரிந்த விடயம்

திவாகர் வின்னரானதும் அவருடை முத்திலும் அவர் பெற்றோர் முகத்திலும் தெரிந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. திவாகர் இன்னும் பல வெற்றிகளைப் பெற வேண்டுமென்று நானும் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்

ஜானகி அம்மாவிடம் திவாகர் வாழ்த்துப் பெறுகின்ற காட்சி


Post a Comment

3 Comments

  1. சாதனையாளன் அஸ்ரப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அஸ்ரப்புக்கு வாழ்த்துக்கள். அதனைப் பகிர்ந்துக்கொண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அஸ்ரபு அவர்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete