உண்மையில் ஒரு நபரின் செல்வாக்கு அவரின் வழித்தோன்றல்கள் மற்றும் அவரிடமிருக்கும் சொத்து செல்வங்களின் நிலையைப் பொருத்துத்தான் அமையும் என்று சொல்வதில் தப்பில்லை என்றே கருதுகின்றேன். தனி நபரை மட்டுமல்லாது தேசத்தையும் ஏழை செல்வந்தன் என்று வகைப்படுத்தும் காலத்தில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வறுமையால் தற்கொலை செய்து கொண்டவர்களும் , தன் கௌரவத்தை பாராமல் தன்னுடைய படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காததனால் குடும்ப சுமை போக்க ஹோட்டல்களில் தினக் கூலிக்கு வேலை செய்யும் இளம் பர…
மேலும் படிக்கபொழுதுபோக்கு இந்த வார்த்தைக்கு அடிமையாகாத மனிதன் இல்லையேன்றே சொல்லலாம். சிறு குழந்தை முதல் வயோதிபத்தை ருசித்துக் கொண்டிருப்பவர்கள் என எல்லோருக்குமே பொழுதுபோக்கு அவசியமானதாகவிருக்கின்றது. நீந்துதல், செஸ் விளையாடுதல், புத்தகம் படித்தல்,வீடியோ கேம்ஸ் விளையாடுதல், புகைப்படமெடுத்தல், நல்ல சினிமாக்களை பார்த்தல்,மீன் பிடித்தல், குழந்தைகளோடு பொழுதைக் கழித்தல் என இப்படி நீண்டதொரு பட்டியலை பொழுதுபோக்கினுள் அடக்கலாம் . இவற்றில் எது பிரயோசனமானது, அறிவை வளர்க்கக் கூடியது எது பிரயோசனமற…
மேலும் படிக்கஎல்லோருக்கும் வெற்றியடைதல் பிடிக்கும் வெற்றியை விரும்பாதவர்கள் எவருமிலர் என்றே சொல்லலாம். எதற்கும் முயற்சிக்காதவரை வெற்றியோ தோல்வியோ கிடைப்பதில்லை எனலாம். எல்லோர் வாழ்விலும் குறிக்கோள் அல்லது இலட்சியமென்று ஒரு மையப் புள்ளி இருக்கும். வாழ்வின் அனைத்துச் செயற்பாடுகளும் இந்த மையப் புள்ளியை பிரதானமாக வைத்தே நகர்த்தப்படுகின்றன. சிலர் மிக இலகுவாகவும், இன்னும் பலர் மிக சிரமத்தின் மத்தியிலும் இந்த மையப் புள்ளியை அடைந்துகொள்கின்றார்கள். பலர் மையப் புள்ளியை அடையாமலேயே இயற்கையெய…
மேலும் படிக்கஅன்புள்ள பேஸ்புக்...
நானும் நீயும் கொண்ட நட்புக்கு வருடம் ஐந்து முடிவடையப் போகின்றது. இடைப்பட்ட இந்த காலத்தில் என்னால் செய்யப்பட்ட தவறுகளைப் புரிந்துகொண்டு அதனை உரிய நேரத்தில். உரிய இடத்தில் உரிமையுடன் சுட்டிக் காட்டி திருத்தச் சொல்லியிருந்தாய், நானும் திருத்திக் கொண்டேன் அதற்கு நான் கோடி நன்றிகளைச் சொல்கிறேன். நீ கூட எனக்குப் பிடிக்காத சில விடயங்களைச் செய்துகொண்டுதான் இருந்தாய். அவற்றை நான் பெரிதுபடுத்தவில்லை. நீ பிடிவாதக்காரன் உன் தவறுகளை உன்னிடமே சுட்டிக் காட்டுவதை விரு…
பிரச்சனைகள் இல்லாத மனிதனே இல்லையென்று சொல்வார்கள், யாரோடு பேச்சுத் தொடுத்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனையைப் பற்றி கூறாமல் தன் பேச்சை நிறுத்த மாட்டார்கள் என்று சொல்லுமளவிற்கு பிரச்சனைகள் இவ்வுலகத்தில் நிறைந்து காணப்படுகிறது. தொழில்நுட்பம் உலகை ஆளுகின்ற காலம் மறைந்து இனிவரும் காலங்களில் பிரச்சனைகள் தான் இந்த உலகத்தை ஆளப் போகிறதோ தெரியவில்லை. அப்படியாகாமல் இருக்க வேண்டும்.
மனிதன் தன் வாழ்வைப் பூரணப்படுத்துவதற்கு இறைவனால் வரமாக வழங்கப்பட்ட
பார்வை,செவிமடுத்தல்,பேச்சு, நடத்தைகள் போன…
என் தேசத்து, என் கிராமத்து மக்கள் இப்போது சாதனையாளர்களை கௌரவப்படுத்த பழகிக் கொண்டார்கள். முன்னெரெல்லாம் சாதனைகள் நிகழ்த்திவரும் எம்மவர்களை அவர்களின் இறுதிச் சடங்குகளில்தான் இவர்கள் இன்ன இன்ன சாதனைகள் புரிந்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம். ஆனால் நிலமை இன்று தலைகீழாய் மாறிவிட்டது என்றே உணர்கிறேன். எம் தேசத்தவன் சந்திரமண்டலத்தில் சென்று சாதனை புரிந்தாலும் (புரிந்தாலும் அல்ல புரிவான்) அவன் பூமிக்கு வந்து சேர்வதற்கு முன்னர் இன மத மொழி கலாச்சார வேறுபாடின்றி அவனைக் கௌரவ…
மேலும் படிக்க
Social Plugin