Looking For Anything Specific?

ads header

2012 டிசம்பரில் உலக அழிவு நிஜமா...?

இன்றைக்கு அதிகமாக எல்லோரும் பேசக் கூடிய ஒரு விடயெமென்றால் அது உலக அழிவு பற்றியத்தான் இருக்க முடியும். விஞ்ஞானிகள் கூட தங்களது மூளைகளை பிழிந்து உலக அழிவுக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டு போகின்றனர்.
கடந்த வருடங்களில் 2012 டிசம்பரில் உலகிற்கு பெரியதொரு ஆபத்து வரவிருப்பதாக அறிவில் முதிர்ச்சி பெற்ற சிலர் கூறி அதுவே சில வேளைகளில் உலக அழிவுக்கும் காரணமாகலாம் என கூறியிருக்கிறார்கள்.

அவர்களின் கூற்றுப்படி 2012 இல் உலகிற்கு சில வேளைகளில் ஆபத்து ஏற்படலாம். ஆனால் அதுவே உலக அழிவுக்கு காரணமாகும் என்பது என்னைப் பொருத்த வரையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். 

அவர்களின் கூற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் பல நிகழ்வுகள் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக சொல்லப் போனால் உலகினில் நடக்கவிருக்கும் அசாதாரண நிகழ்வுகளை மனிதர்கள் தவிர மற்ற அனைத்தும் உணர்ந்துகொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளன. அசாதாரண நிகழ்வு நடக்கவிருக்கும் பிரதேசத்தில் இருக்கும் விலங்குகளும் பறவைகளும் முற்கூட்டியே தங்களை தயார்படுத்திக் கொண்டு வேறு இடங்களை நோக்கி பயணிப்பதனை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

அவ்வகையான முற்கூட்டிய தயார்படுத்தல் ஒன்றாகத்தான் நான் கீழே இணைத்திருக்கும் புகைப்படங்களும் இருக்கலாம். இது மிகவும் அரிதான நிகழ்வாகும். புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்தளவுக்கு மாமிச விரும்பியாக புலிகள் இருக்கின்றன. ஆனால் அந்த புலிகளும் பிற விலங்குகளுடன் நட்புறவு பேணுகின்றது என்பது ஆச்சரியமான விடயமாகத்தான் இருக்கின்றது.

விஞ்ஞானிகளால் அடுக்கப் படும் காரணங்களும் உலக அழிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். விஞ்ஞானிகளின் கூற்றுக்கும் மேலான இறைவனின் கூற்றினையும் இவ்விடயம் தொடர்பில் நாம் நோக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலான இறைவனே உலக அழிவு தொடர்பில் சரியான ஞானம் கொண்டவன்.












Post a Comment

37 Comments

  1. நல்ல இருக்கு

    ReplyDelete
    Replies
    1. சூடான வருகைக்கும் அழகிய பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பாஸ்

      Delete
  2. நண்பா படங்கள் எதுவுமே தெரியவில்லை. ஏதேனும் பிரச்சனைய என்று பார்க்கவும், இல்லையேல் என் இணையத்தில் எதுவும் பிரச்சனையா... பல முறை ரெப்ரெஷ் செய்து பார்த்துவிட்டேனே

    படித்துப் பாருங்கள்

    தலைவன் இருக்கிறான்

    http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_09.html

    ReplyDelete
    Replies
    1. படங்கள் தெரியவில்லையா.......:(

      எனக்கு நன்றாகத்தான் திறக்கின்றது..இருங்கள் இன்னும் ஒருசிலரிடம் கேட்டுவிட்டு சரி பார்க்கிறேன்

      Delete
  3. படங்கள் திறக்கவில்லை விமலன்.
    உண்மை அனைத்தையும் அறிந்தவன் அவன்தானே!
    நன்று

    ReplyDelete
    Replies
    1. நல்ல கருத்து சொன்னீர்கள் ஐயா...

      படங்கள் தெரியவில்லை என நீங்களும் சொல்லியுள்ளீர்கள் சரி பார்க்கிறேன்.

      Delete
  4. நண்பா படங்கள் எதுவுமே தெரியவில்லை. ஏதேனும் பிரச்சனைய என்று பார்க்கவும், இல்லையேல் என் இணையத்தில் எதுவும் பிரச்சனையா... பல முறை ரெப்ரெஷ் செய்து பார்த்துவிட்டேனே

    ReplyDelete
    Replies
    1. இப்போது சரியாகி விட்டது என நினைக்கிறேன் ...

      வருகைக்கும் தவறினை சுட்டிக் காட்டியமைக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  5. படங்கள் எதுவுமே இல்லையே ...??

    ReplyDelete
    Replies
    1. இப்போது சரியாவிட்டது என நினைக்கிறேன் வருகைக்கும் தவறினை சுட்டி காட்டியமைக்கும் மிக்க நன்றி....

      முதல் வருகை என நினைக்கிறேன் உங்கள் வருகை தொடரட்டும்...

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. என்னா இது சின்னப்புள்ளத்தனமா.........:(

      Delete
    2. அப்ப அழியச்சொன்னன்..இப்போ அழிஞ்சிருச்சா???:(
      சிந்திக்க வேண்டிய பதிவு தான்.
      என்னைக்கேட்டால் சொல்வேன்.ஆங்கிலத்திரைப்படங்களில் வருவதை வ போர ஓரிரு நிமிடங்களில் பூமி அழியப்போவதில்ழல.வேதங்கள் கூறியபடியான கடைசி தீர்வை நாளிற்குரிய அறிகுறிகள் தெரிகின்றன்..ஏற்றுக்கொள்ள முடியாத அழிவுகள்....அருவருப்பான சம்பவங்கள்,விழிகளை விரிய வைக்கும் விநோதங்கள்.....!
      சொந்தமே படிப்படியாக இப்போதே பூமி அழிந்தபடி தான் இருக்கிறதுர்.இது ஒரு மாறுதல்.அதாவது இப்போது நாங்கள் ஹோர்மோசேர்பியன' இனத்து மனித மூதாதையர் பற்றிப்பேசுவது போல நாமும் இன்று நாம் காணும் உலகமும் வரலாற்றிற்கு முற்பட்டவைகளாகி பேசப்படு பொருளாகப்போகிறோம்.

      இதற்கு மேல் படைத்தவன் தான் அறிவான்.
      சந்திப்போம் சொந்ததமே...!

      Delete
    3. அட இங்கிலீசு படமொன்றை ஓட்டி காண்பித்து விட்டீங்களே...
      அப்பவிருந்தே பூமி அழிவுக்கு தயாராகி விட்டது தான் ஆனாலும் உடனடியாக உலக அழிவு நடைபெறாது என்பது தான் உண்மை...

      நல்ல கருத்து வருக்கைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சொந்தமே...

      Delete
  8. சிட்டுக்குருவி....
    கடைசி படத்தில் தெரிகிறது
    ”ஆடு நனைகிறதேன்னு ஓநாய் அழுத கதை“....

    ReplyDelete
    Replies
    1. இல்லை நீங்கள் தவறாக புரிந்துவிட்டீர்கள் அதனுடன் தொடர்புடைய புகைப்படங்கள் இன்னுமிருக்கிறது அவைகள் விளையாட்டுக்காகவே அவ்வாறு செய்கின்றன...

      படங்களின் எண்ணிக்கை கருதி நான் அவைகளை இணைக்காமல் விட்டுவிட்டேன்...

      Delete
  9. காலையில் வந்தேன் படம் தெரியல போயிட்டேன் அதான் மீண்டு என்ட்ரி

    என்னாது ஒலகம் அழியுமா?? என்ன குருவி புது கதை....:))

    ReplyDelete
    Replies
    1. ரி எந்த்ரிக்கு மிக்க நன்றி பாஸ்...

      அட நீங்க உலகத்துலே இல்லியா...

      Delete
  10. iraivane !

    unmai arinthavan!

    padangal arumai!

    kadaisi padam kalanga vaikkirathu-
    melum padangal irunthaal thodarungal!

    ReplyDelete
    Replies
    1. நல்ல கருத்து சொன்னீர்கள் நண்பா

      கடைசி படம் அவைகள் செல்லமாக விளையாடுவதனை குறிக்கின்றது...
      படங்களின் எண்ணிக்கை கருதி சில படங்களை பதிவேற்றவில்லை

      Delete
  11. உலகம் 2102 இல் அழியப்போகுதுன்னு சொல்லி ...ஒவ்வொரு நிமிடமும் அனுபவிக்க கற்றுத்தந்தவர்களுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஆமா இல்ல............ இத இப்படியும் பார்க்கலாமாக்கும்...:)

      அழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  12. ஹையோ இதைத்தான் நானும் எப்பவோ தொடக்கம் புலம்பிக்கொண்டிருக்கிறேன்.
    உலகம் அழிந்தால் கவலையில்லை, ஆனா அப்படி பொசுக்கெனப் போகாதாம், பெரிய பெரிய அழிவுகள் வரலாமாம், சில சில பகுதிகளை அழிக்கலாமா.. இது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமோ?

    குடும்பமாக அழிந்தால் கவலையில்லை... திக்குத் திக்காக சுனாமியில் நடந்ததுபோலானால் என்ன செய்வது? அதுதான் என் கவலையே...

    ReplyDelete
    Replies
    1. ஆமா சுனாமியின் வடுக்களை இன்னும் மறக்காத உறவுகள் இருக்கத்தான் செய்கின்றன...

      அதே போல் இன்னுமொரு சுனாமியை தாங்கக் கூடிய சக்தியும் எவரிடமும் இல்லை இப்படி இருக்கையில் உலக் அழிவு தொடர்பான கட்டுக் கதைகள்...?
      சமூகத்தின் மத்தியில் மேலும் பீதியைத்தான் எழுப்புகிறது...

      Delete
  13. மானும் புலியும் அழகான படங்கள். ஆனா கடைசிப் படம் பார்க்க பதட்டமாக இருக்கே... ஆசையாக வளர்த்த மானைப் புலி கொல்கிறதோ? விளக்கமாகப் புரியவில்லைப் படம்.

    ReplyDelete
    Replies
    1. இது மனிதர்களால் வளர்க்கப் பட்ட விலங்குகளில்லை காட்டினில் தனது தாயினை இழந்த மான் குட்டியை புலிகள் தனது சொந்த பிள்ளையைப் போல் பாசத்துடன் வளர்க்கின்றன...

      இதனுடன் தொடர்புடைய புகைப்படங்கள் இன்னுமிருக்கின்றன...எண்ணைக்கை கருதி அவற்றை தவிர்த்து விட்டேன்
      ஆரம்பத்தில் படங்கள் சிலருக்கு தெரியாமல் இருந்ததனால் அவற்றை நீக்கிவிட்டேன்....

      அழகான கருத்திடலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி பூஸார்........

      Delete
  14. நல்ல பதிவு! படங்களும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி பாஸ்.....:)

      Delete
  15. Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  16. //இறைவனே உலக அழிவு தொடர்பில் சரியான ஞானம் கொண்டவன்.//

    சூப்பர் நண்பா.. ஒரு நல்ல விடயம் மக்களை போய் சேர இப்படியான வித்தியாச பதிவுகள் அவசியம்.. மதத்தை சாராது இறைவனை சார்ந்து எழுதி இருகிறீர்கள்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு உற்சாகமூட்டக் கூடிய கருத்தை சொல்லியுள்ளீர்கள்...

      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சார்...

      முதல் வருகை என நினைக்கிறேன் உங்கள் வருகை தொடரட்டும்...

      Delete
  17. அருமையான புகைப்படத் தொகுப்பு...


    இன்றைய பொழப்பு போறதே கழ்டமா இருக்கு பாஸ்....
    இன்னும் ஐந்து மாதம் கழித்து நடக்கப் போவதை எண்ணி கவைப் பட வேண்டாமே...

    ReplyDelete
  18. நல்ல தகவல். நாமளும் உலக அழிவு பத்தி எழுதியிருக்கோம்னு பதிவுலக வரலாறு சொல்லுதாம்லா.....
    http://newsigaram.blogspot.com/2012/05/2012-21-01.html

    ReplyDelete
  19. http://waytoheaven2011.blogspot.com/2012/06/2012.html

    நல்ல தகவல். உலகம் அழிகின்றதோ இல்லையோ ஆனால் நாம் எப்படி வாழ வேண்டும் என்றும் உலக அழிவிலிருந்து நம்மை எப்படி காத்துக்கொள்வது என்று இந்த link ல் கூறியுள்ளேன். நன்றி.


    http://waytoheaven2011.blogspot.com/2012/06/2012.html

    ReplyDelete
  20. உலகம் அழிந்தால் அழியட்டும்

    ReplyDelete